×

காசிமேடு துறைமுகம் அருகே மீன்பிடி வலைகள் எரிந்து நாசம்: மர்ம நபர்களுக்கு வலை

தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (36). இவர், காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்று மீன் பிடித்து வியாபாரம் செய்து வருகிறார். கடலில் இருந்து கரைக்கு திரும்பியதும், தனது வலைகளை கொண்டு வந்து துறைமுகம் அருகே உள்ள பகுதியில் வைப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த வலைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது.இதுகுறித்து, மீன்பிடி துறைமுக போலீசில் ராஜாமணி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் ராஜாமணி, முருகன் ஆகிய மீனவர்கள் தங்களுக்கு செந்தமான பல லட்சம் மதிப்புள்ள கடமா, நண்டு, திருக்கை, பிடிக்க பயன்படுத்தும் வலைகள் எரிந்து நாசமானதும், அந்த வலையில் படுத்திருந்த ஒரு நாய் உடல் கருகி உயிரிழந்ததும் தெரியவந்தது.மேலும் விசாரணையில், இப்பகுதியில் சுற்றித் திரியும் கஞ்சா கும்பல் இந்த வலைகளை தீவைத்து எரித்தது தெரியவந்தது. அவர்களை தேடி வருகின்றனர். மேலும், கடலோரப் பகுதியில் தெருவிளக்கு இல்லாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post காசிமேடு துறைமுகம் அருகே மீன்பிடி வலைகள் எரிந்து நாசம்: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Casimedu ,Bandarbate ,harbour ,Casimade Nasam ,Dinakaran ,
× RELATED தேசிய பாய் மர படகு போட்டி: ஆவடி மத்திய...