×

அண்ணன் சிறையில் இருப்பதால் தம்பிக்கு சரமாரி வெட்டு

பெரம்பூர்: கொடுங்கையூர் தேவி கருமாரி அம்மன் நகரை சேர்ந்தவர் சுந்தர் (23). இவர், நேற்று முன்தினம் அதிகாலை அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர், சுந்தரை வழிமறித்து சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரணையில், வெட்டுக்காயம் அடைந்த சுந்தரின் அண்ணன் டியூக் பாலாஜி மீது கஞ்சா உள்ளிட்ட  பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது, இவர் திருவல்லிக்கேணி போலீசாரால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.  டியூக் பாலாஜிக்கும், மூல சத்திரத்தை சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கும் கடந்த 6 மாதமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த, பிரச்னையில் ஸ்டீபன் தனது நண்பருடன் சேர்ந்து, டியூக் பாலாஜியை வெட்ட முயன்றுள்ளார். ஆனால், அவர் சிறையில் இருப்பதால், அவரது தப்பி சுந்தரை வெட்டியது தெரியவந்தது. இதனையடுத்து, மாதவரம் பச்சையப்பன் கார்டன் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் டேவிட் (47). அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த பிலிப்ஸ் ராஸ்டின் (22) ஆகிய 2 பேரையும் கொடுங்கையூர் போலீசார் நேற்று கைது செய்தனர்….

The post அண்ணன் சிறையில் இருப்பதால் தம்பிக்கு சரமாரி வெட்டு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Sundar ,Kodungaiyur Devi Karumari Amman ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு