×

தாயின் கண்களில் மிளகாய் பொடி தூவி மகள் கடத்தல்: காதலனை மக்கள் மடக்கினர்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெரியகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், அங்குள்ள கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். இவரை ஆத்தூர் அப்பமாசமுத்திரத்தை சேர்ந்த சரவணன் (22) என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவே மாணவியை கண்டித்து செல்போனை பறித்துக் கொண்டனர். இந்நிலையில் நேற்று, சேலம் கல்லூரிக்கு தேர்வெழுத சென்ற மாணவியுடன் தாயாரும் வந்தார். தேர்வு முடிந்ததும், இருவரும் மதியம் வாழப்பாடிக்கு பஸ்சில் வந்து இறங்கினர். அப்போது அங்கு நின்றிருந்த சரவணன், திடீரென மிளகாய் பொடியை எடுத்து தாய் கண்களில் தூவிவிட்டு, மாணவியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினார். தாய் கூச்சலிடவே பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த பயணிகள் சரவணனை மடக்கிப் பிடித்து, மாணவியை மீட்டனர். தகவலறிந்து வந்த வாழப்பாடி போலீசார் 3 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post தாயின் கண்களில் மிளகாய் பொடி தூவி மகள் கடத்தல்: காதலனை மக்கள் மடக்கினர் appeared first on Dinakaran.

Tags : Salem ,Periyakrishnapuram ,Vazhappadi, Salem district ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...