×

ஈரோட்டில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடு, ஒரு எருமை கன்றுக்குட்டி பலி

ஈரோடு: ஈரோட்டில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடு, ஒரு எருமை கன்றுக்குட்டி பலியானது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வில்லரசம்பட்டி ஒண்டிக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி(60). இவர், ஒரு எருமை மாடு, அதன் கன்றுக்குட்டி, 4 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, எருமை மாட்டினை வீட்டின் முன்புறம் கட்டியுள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் 4க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் திடீரென பழனிசாமியின் வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியையும், ஆடுகளையும் கடித்து குதறியது. சத்தம் கேட்டு பழனிசாமி எழுந்து வந்து தெரு நாய்களை விரட்டியடித்தார். ஆனால், அதற்குள் நாய்கள் கடித்து குதறியதில் அடுத்தடுத்து ஒரு கன்றுக்குட்டி, 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன் வில்லரசம்பட்டியில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் 2 ஆடுகள் பலியானது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்தி, இதுபோன்ற சம்பவம் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஈரோட்டில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடு, ஒரு எருமை கன்றுக்குட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Corporation ,
× RELATED ஈரோடு மாநகராட்சியில் வரிவசூல் பணி தீவிரம்