×

திருவாடானை அருகே தார்ச்சாலையை சீரமைக்க வேண்டுகோள்

திருவாடானை: திருவெற்றியூரில் இருந்து தொண்டிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் திருவாடானை அருகே கீழ அரும்பூர் கிராமத்திற்கு சுமார் 2 கி.மீ பிரிவு சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலையாக அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்றது. இந்நிலையில் இந்த சாலையின் கற்கள் அனைத்தும் பெயர்ந்து தற்போது போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்கள் இந்த சாலையில் செல்லும்போது அடிக்கடி பஞ்சராகி விடுகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி சேர்ந்தவர்கள் கூறுகையில், இந்த சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலையாக போடப்பட்டது. தற்போது மிகவும் மோசமாக கற்கள் அனைத்தும் பெயர்ந்து கிடக்கிறது. சுமார் 2 கி.மீ மட்டும் உள்ள இந்தசாலை வாகனங்கள் பயணிக்க முடியாத அளவில் உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்….

The post திருவாடானை அருகே தார்ச்சாலையை சீரமைக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tarsal ,Thiruvadan ,Tiruvadanai ,Thiruvettriur ,Thondiy ,Gelam Arumpur village ,Thiruvadana ,Tarsala ,
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு