×

கொலை வழக்கில் சிறுவன் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், பால்வாடி 3வது தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (40), கூலித்தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு  முன்பு குடிபோதையில் தனது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த 17 வயது  சிறுவன், தகராறு செய்தான். இதில் ஆத்திரமடைந்த சிறுவன், உருட்டுக் கட்டையால் நாராயணன் தலையில் பலமாக தாக்கினார். இதில் பலத்த  காயமடைந்த நாராயணன்கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று   நாராயணன் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார். பூந்தமல்லி போலீசார் கொலை வழக்கில் சிறுவனை கைது செய்தனர்…

The post கொலை வழக்கில் சிறுவன் கைது appeared first on Dinakaran.

Tags : POONTHAMALLI ,Narayanan ,Palwadi 3rd Street, Kattupakkam ,Poontamalli ,Dinakaran ,
× RELATED அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி...