×

செல்போன் பறித்த 2 பேர் சிக்கினர்

அண்ணாநகர்: டி.பி.சத்திரம், கே.வி.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் பிரின்சி (27). முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். கடந்த 29ம் தேதி இவர், முகப்பேர் வழியாக செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர், இவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.புகாரின்பேரில், ஜே.ஜே.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடி கேமராவில் பதிவான பைக் நம்பரை வைத்து  விசாரணை மேற்கொண்டனர். அதில், செல்போனை பறித்து சென்றவர்கள் அம்பத்தூர் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த தனஞ்செழியன் (20), அவரது கூட்டாளி பாலாஜி (20) என்பது தெரிய வந்தது. அவர்களை நேற்று முன்தினம் கைது செய்து, அவர்களிடமிருந்து செல்போன், பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

The post செல்போன் பறித்த 2 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Annagar ,T. GP Inn, K. CV ,N.N. Princy ,Mukapir ,
× RELATED காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய...