×

பிரதமர் மோடியின் தாயார் மறைவு: ஆளுநர், கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆர்.என்.ரவி (தமிழக கவர்னர்): பிரதமரின் தாயார் மறைவு மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா கவர்னர்): அன்னை தீபம் அணைந்து விட்டது.  எதையும் தாங்கும் எப்போதும் உள்ள உறுதியை இப்போதும் நம் இறைவன் பிரதமருக்கு அருளட்டும்.எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சி தலைவர்): பிரதமரின் தாயார் காலமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். பிரதமருக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்.ஓ.பன்னீர்செல்வம் (எதிர்க்கட்சி துணைத்தலைவர்): மிகுந்த வருத்தமளிக்கிறது. பிரதமருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.ராமதாஸ் (பாமக): பிரதமரின் வாழ்வில் அவரது தாயார் எந்தளவுக்கு முக்கியமானவர் என்பதை நான் அறிவேன். தாயை இழந்து வாடும் பிரதமருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.வைகோ (மதிமுக): மோடியின் அன்பு தாயார் நூறாண்டுகள் வாழ்ந்து, மறைந்திருக்கிறார். இந்த செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன். முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): நிறைவாழ்வு கண்ட ஹீராபென் அம்மையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். பிரதமர் மோடி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறோம்.ஜி.கே.வாசன் (தமாகா):  மோடியின் உயர்விற்கும், வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டவர். அம்மையாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.அன்புமணி (பாமக): பிரதமர் மோடியின் வாழ்வில் அவரது தாயாரின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. பிரதமருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.அண்ணாமலை (பாஜ): பிரதமர் மோடிக்கு தமிழக பாஜ சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் நம் தேச மக்கள் அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். டிடிவி.தினகரன் (அமமுக): அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.நடிகர் ரஜினிகாந்த்: மரியாதைக்குரிய பிரதமர் மோடி அவர்களே, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்): மோடியின் தாயார் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 200 வயதானாலும் தாய் தாய்தான். இழப்பு இழப்புதான்.ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி): 100 வயதில் அடியெடுத்து வைத்த அவர், தனது வாழ்வின் இறுதிகாலம் வரை எவர் உதவியுமின்றி தானே நடந்து வந்தார். அவரது மறைவு மோடிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி): தாயாரை பிரிந்து வாடும் பிரதமர் மோடிக்கும், உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவிக்கிறேன். அவரது ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி): பிரதமர் தனது, தாயார் மீது கொண்டிருந்த எல்லையற்ற அன்பையும், பற்றையும் அனைவரும் அறிவார்கள். ஈடு செய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்தி மறைந்திருக்கும் அன்பு தாயின் பிரிவால் துயருற்றிருக்கும் மோடிக்கும் உற்றார், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்….

The post பிரதமர் மோடியின் தாயார் மறைவு: ஆளுநர், கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Governor ,Chennai ,Modi ,Heraben ,R.R. N.N. Ravi ,Tamil Nadu ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...