×

இறைச்சி வியாபாரி வெட்டி கொலை: 7 பேருக்கு வலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தொண்டைமான் நகரை சேர்ந்தவர் கலையரசன்(40). அப்பகுதியில் பன்றி இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து பைக்கில் வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரது வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் வழிமறித்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில், படுகாயம் அடைந்த கலையரசன் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.இதுகுறித்து தகவலறிந்து வந்த புதுக்கோட்டை டவுன் போலீசார் கலையரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து, இந்த கொலை தொடர்பாக புதுக்கோட்டை தெற்கு சந்தைபேட்டையை சேர்ந்த பாரத், நல்லதம்பி, கணேசன்,  பாபு, வடிவேல், வசந்தகுமார், வைரமுத்து ஆகிய 7 பேரை தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post இறைச்சி வியாபாரி வெட்டி கொலை: 7 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Pudukkottai ,Thondiman City of Kalaiyarasan ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...