×

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தர ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2022-2023ம் ஆண்டிற்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கான கொள்கை விளக்க குறிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள மொத்த சர்க்கரை அட்டைதாரர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 83 ஆயிரத்து 756 பேர் மட்டுமே. அரிசி குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து கார்டு கிடைக்காதோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சம். ஆக மொத்தம், கிட்டத்தட்ட 4 லட்சத்து 83 ஆயிரத்து 756 குடும்பங்களுக்கு 2023ம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. இவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினால் அவர்களும் மிகுந்த மன நிறைவுடன் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். எனவே, முதலமைச்சர் சர்க்கரை அட்டை வைத்திருப்போர் மற்றும் அரிசி அட்டைக்கு விண்ணப்பித்து, ஒப்புதல் அளிக்கப்பட்டு அதற்கான கார்டு கிடைக்க பெறாதோருக்கும் 2023ம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தர ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pongal Holy Sanctuary Grade ,O.A. Bannerselvam ,Chennai ,Bannerselvam ,Pongal Holy Samiti Grade O.A. ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...