×

ஸ்ரீ சாஸ்தா பொறியியல் கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா: 253 மாணவர்களுக்கு பட்டம்

சென்னை: சென்னை அடுத்த பூந்தமல்லி ஒன்றியம், செம்பரம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீசாஸ்தா பொறியியல் கல்லூரியில் 19 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஸ்ரீ சாஸ்தா கல்விக் குழுமங்களின் முதன்மைச் செயல் அதிகாரி ஜெ.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் எஸ்.பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் சிவிஆர்டிஇ இயக்குனர் வி.பாலமுருகன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு 253 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வாழ்த்தி பேசியதாவது, இன்று பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் தற்போது பெற்ற பட்டத்தோடு படிப்பை முடித்து விடாமல் மேலும் மேற்படிப்பு படிக்க வேண்டும். மேலும் தாங்கள் படித்த படிப்பு சம்பந்தமாக ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட வேண்டும். நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்வதை தவிர்த்து விட்டு நமது நாட்டிலேயே நீங்கள் சாதனையாளர்களாக உருவாக்க வேண்டும். தாங்கள் படித்த படிப்புக்கேற்ற வேலையை தேடுவதை விட, மற்றவர்களுக்கும் வேலை தரும் தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும். மேலும் தங்களை பெற்றெடுத்த இந்த அளவிற்கு படிக்க வைத்த பெற்றோர்களையும், பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களையும் என்றும் மறவாமல் மதித்து நடந்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….

The post ஸ்ரீ சாஸ்தா பொறியியல் கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா: 253 மாணவர்களுக்கு பட்டம் appeared first on Dinakaran.

Tags : graduation ceremony ,Sri Shasta Engineering College ,Chennai ,ceremony ,Srisasta Engineering College ,Semparambakkam ,Poonthamalli Union, Chennai ,Dinakaran ,
× RELATED சீனாவில் இருந்து வெளியேறும்...