தூத்துக்குடி: இலங்கையில் பீடி இலை கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்திலிருந்து பீடி இலை கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனிடையே தூத்துக்குடியிலிருந்து பீடி இலைகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தூத்துக்குடி அருகே புல்லாவெளி பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு மினி லாரியில் சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. போலீசார் அதை மடக்கியதும் கடத்தல் கும்பல் தப்பியோடிவிட்டது. தொடர்ந்து போலீசார் மினிலாரியில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் 40 மூட்டைகளில் 1.50 டன் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பீடி இலை மூட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர். இதன் இலங்கை மதிப்பு ரூ.45 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்….
The post இலங்கைக்கு கடத்த முயன்ற 1.50 டன் பீடி இலை பறிமுதல் appeared first on Dinakaran.