×

தூத்துக்குடியில் ஓவிய ஆசிரியர் குடில் மூலம் விழிப்புணர்வு: அவதார் கதாபாத்திரங்கள், உக்ரைன் போர் பாதிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஓவியம்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஓவிய ஆசிரியர் குடில் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் . தூத்துக்குடியில் ஓவிய ஆசிரியரும் அவரது மகளும் இணைந்து அமைத்துள்ள கிறிஸ்துமஸ் குடில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஓவிய ஆசிரியர் இசிடோர் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தனது இல்லத்தில் அந்த ஆண்டின் முக்கிய சம்பவங்களை பிரதிபலிக்கும் வகையில் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் ஓவியர்  இசிடோர் அவரது மகள் அர்ச்சனாவுடன் இணைந்து கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார். இந்த குடிலில் அவதார் திரைப்பட கதாபாத்திரங்கள், உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் கூட்டுகுடும்பத்தின் ஒற்றுமை வாழ்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கிறிஸ்துமஸ் குடிலை ஏராளமானோர் பார்த்து ரசித்ததோடு தந்தை, மகளையும் பாராட்டி செல்கின்றனர். …

The post தூத்துக்குடியில் ஓவிய ஆசிரியர் குடில் மூலம் விழிப்புணர்வு: அவதார் கதாபாத்திரங்கள், உக்ரைன் போர் பாதிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஓவியம்..!! appeared first on Dinakaran.

Tags : Kudle ,Thutukudi ,Ukraine war ,Thuthukudi ,Tutualudi ,Ukraine ,
× RELATED தூத்துக்குடி – திருச்செந்தூர்...