×

21 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் போலீசார் சென்னை பாடி அருகே தனியார் பிஸ்கட் கம்பெனி அருகே இன்று காலை  சென்றனர். அவர்களை பார்த்ததும், கஞ்சா பார்சல்களை விட்டுவிட்டு 2 வாலிபர்கள் தப்பியோட முயற்சித்தனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று, மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் மதுரை மாவட்டம், தத்தனேரி, அருள்தாசபுரத்தை சேர்ந்த கோகுல் (19), சென்னை முகப்பேர் மேற்கு, 3வது பிளாக் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (21) எனத் தெரியவந்தது. இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் மொத்தம் 21 கிலோ கஞ்சா பார்சல்கள் பறிமுதல் செய்யப்பட்டன….

The post 21 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Ambattur ,Prohibition ,Inspector ,Tillibabu ,Padi ,Chennai ,Dinakaran ,
× RELATED மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு