×

கத்திபாரா மேம்பாலத்தில் ஓடும் காரில் தீவிபத்து

ஆலந்தூர்: அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (36). தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி திவ்யா (34). குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் காரில் தேனாம்பேட்டையில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். திவ்யா காரை ஒட்டியுள்ளார். கிண்டி  கத்திபாரா மேம்பாலத்திலிருந்து கார் கீழே இறங்கும்போது, இன்ஜினில் புகை வருவதை கண்டதால், உடனே மேம்பாலத்தின் ஒரமாக காரை நிறுத்தி விட்டு அனைவரும் இறங்கியனர். சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார், அங்கு வந்து போக்குவரத்தை தடை செய்தனர். பின்னர், அசோக் நகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அனைத்தனர். இதில் காரின் முன் பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் கத்திபாரா மேம்பால பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

The post கத்திபாரா மேம்பாலத்தில் ஓடும் காரில் தீவிபத்து appeared first on Dinakaran.

Tags : Kathibara ,flyover ,ALANTHUR ,Ashokumar ,Ayyapandangal ,Dinakaran ,
× RELATED மேடவாக்கம் மேம்பாலத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து