×

இந்திய வீரர்களின் துணிச்சலை எவ்வளவு பாராட்டினாலும் போதாது: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

புதுடெல்லி:  கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்திலும், தவாங் சம்பவத்திலும் வீரர்கள் காட்டிய துணிச்சலுக்கு எவ்வளவு பாராடினாலும் போதுமானதாக இருக்காது என்று ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,’ சீனா போருக்கு தயாராகி வருகின்றது, ஒன்றிய அரசு தூங்கிக்கொண்டு இருக்கின்றது’ என்று கருத்து தெரிவித்து இருந்தார். ராகுலின் இந்த கருத்துக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் பங்கேற்று பேசியபோது ராகுலை மறைமுகமாக சாடினார்.நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ” கல்வான் பள்ளத்தாக்கிலும் சரி, தவாங்கிலும் சரி, ஆயுத படைகளின் துணிவையும், வீரத்தை அவர்கள் வெளிப்படுத்திய விதத்தையும் எவ்வளவு முறை பாராட்டினாலும் போதாது.நாங்கள் வல்லரசு ஆக விரும்புகிறோம் என்று கூறும்போது உலகில் உள்ள நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம் என்று ஒருபோதும் கருதக்கூடாது. எந்த நாட்டின் ஒரு அங்குலம் இடத்தை கூட கைப்பற்றும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. நாம் வல்லரசாக விரும்பினால் உலக நன்மை மற்றும் வளத்துக்காக வல்லரசாக விரும்புகிறோம். உலகம் நமது குடும்பம். 21ம் நூற்றாண்டில் முதல் பத்து பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்றது. எனினும் வளர்ச்சி மேற்கொள்ளப்படவில்லை. 2014ல் பிரதமராக மோடி பதவியேற்றபோது வளர்ச்சிக்கான புதிய சகாப்தம் தொடங்கியது. இன்று இந்திய ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது” என்றார்.* பொய்யின் அடிப்படையில் அரசியல் செய்ய முடியாதுஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,’ எதிர்கட்சியில் இருக்கும் எந்த தலைவரின் நோக்கத்தையும் நாங்கள் கேள்வி கேட்கவில்லை. கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே விவாதித்தோம். அரசியல் என்பது உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். பொய்யின் அடிப்படையில் நீண்ட காலம் அரசியல் செய்ய முடியாது. சமூகத்தை சரியான முறையில் கொண்டு செல்லும் செயல்முறை ராஜநீதி என்று அழைக்கப்படுகின்றது. ஒருவருடைய நோக்கத்தில் எப்போதும் சந்தேகம் இருப்பதற்கான காரணம் எனக்கு புரியவில்லை’ என்றார்….

The post இந்திய வீரர்களின் துணிச்சலை எவ்வளவு பாராட்டினாலும் போதாது: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Defense Minister ,Rajnath Singh ,New Delhi ,Kalwan Valley ,Tawang incident ,Union ,
× RELATED தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான்: ராஜ்நாத் சிங்