×

ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: பாமக தலைவர் அன்புமணி காட்டம்

சென்னை:
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவு: கோவை
உப்பிலிப்பாளையத்தைச் சேர்ந்த பொறியாளர் சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில்
லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து
கொண்டிருக்கிறார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்
கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய ஆள்கொல்லியாக மாறி வருகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 37 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை
இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் 5 பேர்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ளனர்.இளைஞர்களின் உயிரை
பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என
ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்துகிறது. இது குறித்து அமைச்சரே நேரில்
சந்தித்து வலியுறுத்தியும் ஆளுநர் அசைந்து கொடுக்காமல் இருப்பது சரியல்ல.
இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது.ஆன்லைன் சூதாட்டத்தடை
சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு நேற்றுடன் 59 நாட்களாகின்றன. ஆளுநர்
கோரிய அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்ட பிறகு தடை சட்டத்திற்கு ஒப்புதல்
அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது பல்வேறு ஐயங்களையும், யூகங்களையும்
ஏற்படுத்துகிறது. ஆளுநரின் அலட்சியத்தையும், காலதாமதத்தையும் தமிழக அரசு
பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: பாமக தலைவர் அன்புமணி காட்டம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Bambaga ,President ,Anbaramani Gattam ,Chennai ,Twitter ,Bambaya ,Annpurani ,Engineer ,Sankar ,Uppilapalam ,Gov ,Bambanya ,Anbari Gattam ,
× RELATED ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம்...