சென்னை: மாண்டஸ் புயலின் காரணமாக டிசம்பர் 9, 10ஆம் தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அண்ணாபல்கலை கழகத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து மாண்டஸ் புயல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிசம்பர் 9ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.24ம் தேதியும், டிசம்பர் 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.31ம் தேதியும் நடைபெறும் என ஏற்கனவே அண்ணா பல்கலைகழகம் அறிவித்தது.இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வு மீண்டும் ஒத்திவைத்துள்ளது. டிசம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 19-ல் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….
The post அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றம்: ஜன. 19 மற்றும் 20ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..! appeared first on Dinakaran.