×

நம்புங்க… அரசியல் பேச மாட்டேன்!சுயேச்சையாக களம் இறங்கிய நடிகர் மயில்சாமி

காமெடி  நடிகர் மயில்சாமி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ஆனாலும் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. அரசியல் கருத்துக்களை அவ்வப்போது பேசி வருகிறவர். சுனாமி, வெள்ள பெருக்கு, புயல் காலத்தில் களத்தில் இறங்கி பணியாற்றியுள்ளார். அவர் தற்போது நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இது குறித்து அவர் கூறியதாவது: விருகம்பாக்கத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன். தொகுதி மக்கள் எனக்கு நன்கு பழக்கமானவர்கள். பேரிடர் காலங்களில் என்னால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்திருக்கிறேன். அதற்கு நன்றி கடனாக எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்க மாட்டேன். அந்த உதவிகளை அதிகமாக செய்ய பொறுப்பு கொடுங்கள் என்று கேட்பேன். நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். ஆனால் எந்த கட்சியிலும் சேரவில்லை. இந்த தேர்தலில் நான் அரசியல் பேச மாட்டேன். தொகுதி மக்களின் பிரச்னைகளை மட்டுமே பேசுவேன் என்றார்.* குன்றம் தொகுதியில் 54 ஆண்டுக்கு பின் பெண் வேட்பாளராக ஆட்டோ டிரைவரின் மனைவிமதுரை திருப்பரங்குன்றம் தொகுதி தற்போது திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பொன்னுத்தாய் (46) வேட்பாளராக களமிறங்குகிறார். இவர் மாரக்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினராகவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் உள்ளார். இவருடைய கணவர் ஆட்டோ டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு ராகுல் என்ற மகன், இலக்கியா என்ற மகள் உள்ளனர். இந்த தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 54 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பெண் வேட்பாளர் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 1967ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீராங்கனையும், மாதர் சங்க நிறுவனர்களில் முக்கியமானவருமான திருநகரை சேர்ந்த ஜானகியம்மாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். தற்போது மீண்டும் 54 ஆண்டுகளை கடந்து பெண் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொன்னுத்தாய் களமிறங்குகிறார்….

The post நம்புங்க… அரசியல் பேச மாட்டேன்!சுயேச்சையாக களம் இறங்கிய நடிகர் மயில்சாமி appeared first on Dinakaran.

Tags : Mayilsamy ,Mylaswamy ,MGR ,
× RELATED எம்ஜிஆர் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட 5 பேர் கைது