- கேரள மகளிர் கொங்
- திருவனந்தபுரம்
- லதிகா சுபாஷ்
- கேரள மகளிர் காங்கிரஸ்
- கோட்டயம் மாவட்டம்
- எருமனூர்
- தொகுதியில்
திருவனந்தபுரம்: கேரள மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருந்தவர் லதிகா சுபாஷ். இவர் கோட்டயம் மாவட்டம் ஏற்றுமானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று வெளியிடப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் லதிகா சுபாஷ்க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடும் ஏமாற்றம் அடைந்த அவர் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மொட்டை அடித்து போராட்டம் நடத்தினார். மேலும் மகளிர் காங்கிரஸ் தலைவி பொறுப்பையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில், லதிகா சுபாஷ் ஏற்றுமானூர் தொகுதியில் சுயேட்சையாக ேபாட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டனர்….
The post கேரள மகளிர் காங். தலைவி சுயேட்சையாக களமிறங்க முடிவு appeared first on Dinakaran.