×

தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: வானிலை மையம் தகவல்

சென்னை: இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வரும் 20ஆம் தேதியன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.அடுத்த இரு தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்ஸியஸ் உயர்ந்து காணப்படும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Puduva ,Karaikal ,New Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...