சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுககளை மீண்டும் ஒத்திவைப்பு செய்து அண்ணா பல்கலை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு தேர்வு நடக்க இருந்தது. மாண்டஸ் புயல் காரணமாக இத் தேர்வுகள் வரும் 24 மற்றும் 31ம் தேதிகளுக்கு தள்ளிவைத்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த தேர்வை 2வது முறையாக மீண்டும் தள்ளி வைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 9ம் தேதி நடைபெற இருந்த தேர்வு அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 19ம் தேதிக்கும் (வியாழக்கிழமை), கடந்த 10ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜனவரி 20ம் தேதிக்கும் (வெள்ளிக்கிழமை) தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது….
The post அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.