×

வாலிபரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி

பூந்தமல்லி: சென்னை மதுரவாயல் அருகே வானகரம், வரசக்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (27). இவர், அதே பகுதியில் ஒருதனியார் ஸ்டீல் கம்பெனியில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கம்பெனிக்கு சேரவேண்டிய ரூ.5 லட்சத்தை வசூலித்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு பேருந்து மூலம் தினேஷ் மதுரவாயல் வந்திறங்கினார். முன்னதாக, தன்னை மதுரவாயல் வந்து பைக்கில் அழைத்து செல்லும்படி நண்பர் விக்னேஷ்குமார் (28) என்பவரிடம் தினேஷ் கூறியிருந்தார். அதன்படி, நள்ளிரவு தினேஷ் மற்றும் நண்பர் விக்னேஷ்குமார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். முதலில் நண்பரை வீட்டில் இறக்கிவிட்டு, பைக்கில் தனியே தினேஷ் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மதுரவாயல், ஓடமா நகரில் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் வழிமறித்து, முகவரி கேட்பது போல் நடித்துள்ளனர். பின்னர் தினேஷை கத்திமுனையில் மிரட்டி, அவர் பையில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பி சென்றனர். புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பைக் பதிவெண்ணை 2 மர்ம நபர்களை வலைவீசி தேடுகின்றனர். …

The post வாலிபரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Dinesh ,Varasakthi Vinayakar Koil Street, Vanakaram ,Maduravayal, Chennai ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்