×

செருப்பை எடுக்க முயன்றபோது விவரீதம் குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், அன்னை பில்டர்ஸ் பகுதியில் வசிப்பவர் திருப்பதி. இவர், சமையல் வேலை செய்கிறார். இவருக்கு திருமணமாகி வினிதா என்ற மனைவியும், தீபிகா (12) என்ற மகளும், திவின்குமார்(10) என்ற மகனும் உள்ளனர். இருவரும் அதே பகுதி அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பும் படிக்கின்றனர். இந்நிலையில், நேற்று சிறுவன் திவின்குமார், அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (13) மற்றும் அஸ்வின்(13) ஆகியோருடன் பாரிநகர் காலி கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது குட்டை அருகே விழுந்த பந்தை எடுக்க சிறுவன் யுவராஜ் வந்தான். அப்போது, அவனது செருப்பு குட்டையில் விழுந்ததாக கூறப்படுகிறது. அதை எடுக்க சிறுவன் யுவராஜ் முயற்சித்த போது, தவறி குட்டையில் விழுந்துள்ளான். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திவின்குமார் மற்றும் அஸ்வின் ஆகியோர் தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யுவராஜை கை கொடுத்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களும் தவறி குட்டையில் விழுந்தனர். 3 சிறுவர்களும் தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடினர். அவர்களது அலறல் கேட்டு திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக குட்டையில் இறங்கி யுவராஜ் மற்றும் அஸ்வினை மீட்டனர். மேலும் எங்கு தேடியும் திவின்குமார் கிடைக்கவில்லை. தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர் விரைந்து வந்து குட்டையில் உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றி விட்டு, சுமார் மூன்று மணி நேரத்திற்கு பிறகு திவின்குமார் உடலை மீட்டனர். இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் தண்ணீரில் விழுந்து உயிர் பிழைத்த சிறுவர்கள் யுவராஜ் மற்றும் அஸ்வினை சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். …

The post செருப்பை எடுக்க முயன்றபோது விவரீதம் குட்டையில் மூழ்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Anakaputtur ,Annai Builders ,Tirupati ,
× RELATED சலுகை விலை அறிவிப்பால் துணிக்கடையில்...