நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல்(27), எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சக்திவேல் அதே பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி, தன் தாயிடம் சொல்லி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகார் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலுவை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார்….
The post மாணவி பலாத்காரம் appeared first on Dinakaran.
