×

மரத்தில் பைக் மோதி 2 கல்லூரி மாணவர் பலி

ஈரோடு: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த ஜெயக்குமார் மகன் தருண் (17). இவர், ஈரோடு அடுத்த வெள்ளோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி ஆட்டோ மொபைல் 2ம் ஆண்டு படித்து வந்தார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக தருண் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று இரவு கல்லூரி விடுதி செல்வதற்காக பெருந்துறைக்கு பஸ்சில் சென்றுள்ளார். பின்னர், அவருடன் கல்லூரியில் சிவில் பிரிவில் 3ம் ஆண்டு படிக்கும் சிவகாசி மாவட்டம் ஈங்கார் விளக்கு பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் அபினேஷ் (19) என்பவருடன் நேற்று இரவு பைக்கில் விடுதிக்கு சென்று கொண்டிருந்தார்.பைக்கை அபினேஷ் ஓட்டி சென்றார். ஈரோடு-பெருந்துறை ரோடு பவளத்தாம்பாளையம் அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டினை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது….

The post மரத்தில் பைக் மோதி 2 கல்லூரி மாணவர் பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Tarun ,Jeyakumar ,Paramathi Vellore ,Namakkal ,Vellot ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்