×

ஒப்பந்த ஊழியர் படுகொலையில் 3 பேர் கைது; 7 பேருக்கு வலை

திருவள்ளுர்: திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரியில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் ஊழியர்களை பணி அமர்த்துவதில் 9 ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுங்குவார்சத்திரம் பகுதியை சேர்ந்த நரேஷ் என்பவர் ஒப்பந்தம் செய்து அதிக அளவில் வடமாநில இளைஞர்களை பணியமர்த்தி வந்துள்ளார். நரேஷ் வட மாநில இளைஞர்களை பேரம்பாக்கம் எம்ஜிஆர் நகரில் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கவைத்துள்ளார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த முத்திஸ், பிரபு ஆகியோர் கூடுதலாக தங்களுக்கும் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கவேண்டும் என்று தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஓராண்டுக்கு பிறகு தருவதாக கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்து முத்திஸ், பிரபு ஆகியோர் தனது கூட்டாளிகளுடன் நரேஷை அழைத்துவந்து வடமாநில இளைஞர்கள் தங்கியுள்ள பேரம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதிக்கு வந்து மிரட்டியுள்ளார். இதனால் அவர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அப்துல் அசின் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் கொலை வழக்கு தொடர்பாக மப்பேடு மேட்டுமாநகரை சேர்ந்த முத்தீஸ் (28), கீழச்சேரி, செயம்பாக்கத்தை சேர்ந்த பிரபு (32), கடம்பத்தூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த தினேஷ் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இக்கொலை சம்பந்தமாக 7 பேரை தேடி வருகின்றனர்….

The post ஒப்பந்த ஊழியர் படுகொலையில் 3 பேர் கைது; 7 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : contract worker ,Tiruvallur ,Geezachery ,Mappedu ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி...