- திசுகா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கெ ஸ்டாலின்
- சூறாவளி பிரசாரம்
- திருவாரூர்
- சென்னை
- தஜாகம்
- கி.மு.
- திருவாரூர்
சென்னை: திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் செய்கிறார். தனது பிரசாரத்தை அவர் திருவாரூரில் இருந்து இன்று முதல் தொடங்குகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் மட்டும் 188 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்த நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதன் ஒரு கட்டமாக இன்று பிற்பகல் 12.30 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள பழைய மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி எம்.தங்கவேலுவிடம் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து அவர் திருவாரூருக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து அவர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளார்.இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 15ம் தேதி (இன்று) முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த மண், திருவாரூர் தெற்கு ரத வீதியில், திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 3 தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தனது தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்குகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மு.க.ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதே நேரத்தில் திமுக வேட்பாளர்களும் வீடு, வீடாக சென்று தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்….
The post திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்: திருவாரூரில் இன்று முதல் தொடங்குகிறார் appeared first on Dinakaran.