×

தீவிரவாத தளபதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் உள்ளூர் தளபதியாக செயல்பட்ட பயங்கர தீவிரவாதி, பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் உள்ள தில்வானி மொகல்லா வாக்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்தனர். அங்கு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் கொடுத்த தகுந்த பதிலடியில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட தீவிரவாதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் கமாண்டர் ஷாம் சோபி என அடையாளம் காணப்பட்டுள்ளது….

The post தீவிரவாத தளபதி சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Burning ,Srinagar ,Jaish E Mohammed ,Jammu and ,Kashmir ,Radical Commander ,Bake ,
× RELATED மின்னணு வாக்கு பதிவு கருவி திருட்டு...