×

வாக்குப்பதிவு இயந்திரம் இருந்த குடோனில் கேமரா சேதம்: நெல்லையில் 7 பேரை பிடித்து விசாரணை

நெல்லை: நெல்லை ராமையன்பட்டியில் வாக்குபதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள குடோனிளில் கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் குடோன் உள்ளது. இங்கு நெல்லை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. குடோனை சுற்றிலும் 5 கண்காணிப்பு கேமரா உள்ளன. இந்த கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்கும். சட்டபை தேர்தல் ஏப். 6ம்தேதி நடைபெற உள்ளதால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு 5 சட்டசபை தொகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் இங்குள்ள கண்காணிப்பு கேமராவை கடந்த 13ம் தேதி இரவு மர்ம நபர்கள் உடைத்துள்ளது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து குடோனில் நேற்று இரவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகளின் புகாரின்பேரில் மானூர் போலீசார் 7 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்….

The post வாக்குப்பதிவு இயந்திரம் இருந்த குடோனில் கேமரா சேதம்: நெல்லையில் 7 பேரை பிடித்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Goodon ,Paddy ,Kudonil ,Dinakaran ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...