×

போதை மறுவாழ்வு மையத்தில் 17 பேர் தப்பி ஓட்டம்

பூந்தமல்லி: திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம், பாடசாலை தெருவில் இமானுவேல் என்பவர் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறார். இங்கு, குடிப்பழக்கம் மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 18 பேர் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில், நேற்று போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பினர். இதையறிந்த உரிமையாளர் இமானுவேல் அதிர்ச்சியடைந்தார். உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். இதனிடையே, தப்பி ஓடியவர்களில் 8 பேர் மீண்டும் வந்துவிட்டனர். 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post போதை மறுவாழ்வு மையத்தில் 17 பேர் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Emanuel ,School Street, Ayanambakkam ,Tiruvekadu ,Dinakaran ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ