×

உத்திரமேரூர் அருகே இருளர் குடும்பங்களுக்கு இலவச வீடுகட்ட அடிக்கல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற பழங்குடியினத்தை சார்ந்த 178 இருளர் குடும்பங்களுக்கு இலவச வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கி, அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  ஆர்த்தி  தலைமை தாங்கினார். உத்திரமேரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதாஞானசேகரன் துணை பெருந்தலைவர் வசந்திகுமார்  முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ மற்றும் காஞ்சி எம்பி ஜி.செல்வம் கலந்து கொண்டு 178 இருளர் குடும்பங்களுக்கு ₹ 8 கோடியே 22 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி  ஆணை வழங்கினர். மேலும், வீடு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரைய்யா, வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்….

The post உத்திரமேரூர் அருகே இருளர் குடும்பங்களுக்கு இலவச வீடுகட்ட அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Uttara Merur ,Uthramerur ,Malayangulam ,
× RELATED இணையவழியில் ஆவணங்கள் பெற பழங்குடியினருக்கு சிறப்பு பயிற்சி முகாம்