×

காரைக்குடியில் வீடு புகுந்து 65 பவுன் தங்க, வைர நகைகள் கொள்ளை : டவுசர் கொள்ளையர்கள் அட்டகாசம்

காரைக்குடி : காரைக்குடியில் வீடு புகுந்து 65 பவுன் தங்க, வைர நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10வது வீதி தெற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (56). நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி வரும், இவர் கடந்த மாதம் 4ம் தேதி உடல் நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காக சென்னை சென்றுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன், வீட்டில் சிசிடிவி கேமரா காட்சிகள் தெரியாததால், அருகில் உள்ள வீட்டாரிடம் தனது வீட்டை சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது, கேமரா மற்றும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள், அய்யப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம் அய்யப்பன் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பிரோவில் இருந்த 65 பவுன் தங்க, வைர நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், அழகப்பாபுரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை ஆய்வு செய்தனர். வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியில், சுமார் 20 முதல் 25 வயது மதிக்கதக்க 5 நபர்கள் டவுசர் அணிந்து முகத்தில் மாஸ்க் உடன் உள்ளே நுழைந்து முன்பக்க கதவை கடப்பாரையால் உடைக்கின்றனர். பின்னர் சிசிடிவி கேமராவையும் உடைத்து விட்டு உள்ளே நுழைகின்றனர். இச்சம்பவம் குறித்து அழகப்பாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post காரைக்குடியில் வீடு புகுந்து 65 பவுன் தங்க, வைர நகைகள் கொள்ளை : டவுசர் கொள்ளையர்கள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Karaickudi ,Karaigudi ,Karakudi ,Atakasam ,
× RELATED மாநில அரசுகளை பலவீனப்படுத்தவே ஒரே...