×

சாரல் இன்றி தொடர் வெயில் குற்றால அருவிகள் வறண்டன

தென்காசி : குற்றாலத்தில் இந்த ஆண்டு கோடையில் அதாவது மே மாதத்தின் இரண்டாவது வாரத்திலேயே சீசன் துவங்கியது. சுமார் 10 தினங்கள் சாரலுடன் சீசன் களைகட்டி காணப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக சாரல் மறைந்து வெயில் அடித்து வருகிறது. தொடர்ந்து சாரல் இல்லாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் மிகவும் குறைவாக தண்ணீர் விழுகிறது.  பெண்கள் பகுதியில் தண்ணீர் வரத்து அடியோடு நின்று விட்டது. ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் குறைவாக தண்ணீர் விழுகிறது. புலியருவி தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. பழைய குற்றாலத்திலும் குறைவாகவே தண்ணீர் விழுகிறது. நேற்று மாலை வரை வெயில் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு சற்று இதமான காற்று வீசியது. சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்து விட்டது. வந்திருந்த குறைவான சுற்றுலா பயணிகளும் வரிசையில் நின்றே குளிக்க அனுமதிக்கப்பட்டனர்….

The post சாரல் இன்றி தொடர் வெயில் குற்றால அருவிகள் வறண்டன appeared first on Dinakaran.

Tags : Charal ,Tenkasi ,Courtalam ,Kurdala ,Dinakaran ,
× RELATED குற்றாலம் அருவிகள் வறண்டு காட்சி அளித்த நிலையில் தற்போது இடியுடன் மழை!