×

தங்கம் விலை அதிரடி உயர்வு சவரன் 40,000ஐ நெருங்கியது: போர் தொடர்ந்தால் விலை உயர்வு உச்சத்தை தொடும்

சென்னை: தங்கம் விலை கடந்த 4 மாதமாக ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்வை சந்தித்தது. அதாவது, கடந்த 24ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 155 அதிகரித்து ஒரு கிராம் 4874க்கும், சவரனுக்கு 1,240 உயர்ந்து ஒரு சவரன் 38 ஆயிரத்து 992க்கு விற்பனை ஆனது. இந்த விலையேற்றத்துக்கு ரஷ்யா, உக்ரைன் இடையே தொடங்கிய போரே காரணம் என்று கூறப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், அதே வேகத்தில் குறைவதுமான போக்கும் இருந்து வருகிறது.கடந்த 1ம் ேததி ஒரு சவரன் 38,384க்கும், 2ம் தேதி சவரன் 39,024க்கும், 3ம் தேதி சவரன் ₹38,912க்கும் விற்கப்பட்டது. 4ம் தேதி(நேற்று முன்தினம்) தங்கம் விலை கிராமுக்கு 4,873க்கும், சவரன் 38,984க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடி உயர்வை சந்தித்தது. காலையில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 97 உயர்ந்து ஒரு கிராம் 4,970க்கும், சவரனுக்கு 776 அதிகரித்து ஒரு சவரன் ₹39,760க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் பவுன் ₹40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாலையில் காலை நிலவரப்படியே தங்கம் விற்பனையானது.இந்த அதிரடி விலை ஏற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கம் தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதன் தாக்கம் உலக சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை உயர்ந்துள்ளது. போர் தொடரும் பட்சத்தில் தங்கம் விலை இதே வேகத்தில் உயர்ந்து கொண்டு தான் இருக்கும்.எவ்வளவு உயரும் என்பதை சொல்ல முடியாது. அதாவது தினம், தினம் தங்கம் புதிய உச்சத்தை தொடும். போர் பதற்றம் தணியும் பட்சத்தில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. அதுவரையில் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை இவ்வாறு அவர் கூறினார்.தங்கம் விலை உயர்வால் நகைக்கடையில் நேற்று சற்று கூட்டம் குறைவாக காணப்பட்டது. விலை உயர்வால் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்….

The post தங்கம் விலை அதிரடி உயர்வு சவரன் 40,000ஐ நெருங்கியது: போர் தொடர்ந்தால் விலை உயர்வு உச்சத்தை தொடும் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Savaran ,Dinakaran ,
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...