×

குண்டு பாய்ந்து புதுகை சிறுவன் பலி; சிஐஎஸ்எப், போலீசாரின் 48 துப்பாக்கிகள் பறிமுதல்: யாருடைய குண்டு என கண்டறிய ஆய்வு

புதுக்கோட்டை: புதுகை அருகே குண்டு பாய்ந்து சிறுவன் பலியான விவகாரத்தில் யாருடைய துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்தது என்பதை கண்டறிய சிஐஎஸ்எப் மற்றும் தமிழக போலீசாரின் 48 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் கடந்த மாதம் 30ம் தேதி மத்திய தொழிலக பாதுகாப்பு படை(சிஐஎஸ்எப்) வீரர்கள் மற்றும் மத்திய மண்டல போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, பசுமலைப்பட்டி மலையடிவாரத்தில் இருந்த குடிசை வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த கலைச்செல்வன் மகன் புகழேந்தி(11) தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. சிறுவன் புகழேந்தி, தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 3ம் தேதி இறந்தான். இதுதொடர்பாக கீரனூர் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது வெடி பொருட்களை கவனமாக கையாளாமல் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது உள்பட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே ஆர்டிஓ பாலதண்டாயுதபாணி, சிறுவன் தலையில் குண்டு பாய்ந்ததற்கான விசாரணை அறிக்கையை கலெக்டர் கவிதா ராமுவிடம் தாக்கல் செய்தார். அதில், நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில்  போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். எனவே சிறுவன் தலையில் பாய்ந்த குண்டு யாருடையது என தடவியல் நிபுணரை கொண்டு ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்திய 34 பேரின் துப்பாக்கிகள், தமிழ்நாடு போலீஸ் பயன்படுத்திய 14 துப்பாக்கிகளை கீரனூர் போலீசார் நேற்றுமுன்தினம் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்….

The post குண்டு பாய்ந்து புதுகை சிறுவன் பலி; சிஐஎஸ்எப், போலீசாரின் 48 துப்பாக்கிகள் பறிமுதல்: யாருடைய குண்டு என கண்டறிய ஆய்வு appeared first on Dinakaran.

Tags : CISF ,Pudukottai ,Pudukhai ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!