×

கள்ளக்காதலனின் திருமணத்தை நிறுத்த குழந்தையை திருடிய இளம்பெண் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியை சேர்ந்தவர் நீதுராஜ் (33). அவருக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கணவர் துபாயில் உள்ளார். நீது ராஜ் கொச்சி களமசேரியை சேர்ந்த இப்ராஹிம் பாதுஷா நடத்தும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நாளடைவில் அவர்களுக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதில் நீது ராஜ் கர்ப்பிணியானார். ஆனால் பின்னர் கர்ப்பம் கலைந்தது. இந்த விவரம் இப்ராஹிம் பாதுஷாவுக்கு தெரியாது. இதற்கிடையே நீது ராஜிடமிருந்து இப்ராஹிம் பாதுஷா ரூ. 30 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்த பணத்தை பலமுறை கேட்டும் அவர் கொடுக்கவில்லை. இதற்கிடையே இப்ராகிம் பாதுஷா வேறு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இது நீது ராஜுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஏதாவது ஒரு மருத்துவமனையிலிருந்து பிறந்த குழந்தையை கடத்தி அதை கள்ளக்காதல் மூலம் பிறந்த குழந்தை என்று கூறி இப்ராஹிம் பாதுஷாவின் திருமணத்தை முடக்கவும், தன்னிடமிருந்து வாங்கிய பணத்தை திரும்ப வாங்கவும் நீது ராஜ் திட்டமிட்டார். அதன்படி நேற்று மாலை நீது ராஜ் நர்ஸ் வேடத்தில் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு 2 நாட்களுக்கு முன்பு பிரசவித்த அஸ்வதி என்ற பெண்ணின் குழந்தையை நைசாக திருடிச் சென்றார். குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளதாகவும் உடனே இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என்றும் கூறி நீது ராஜ் குழந்தையை கொண்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தையை திரும்ப கொண்டு வராததால் சந்தேகமடைந்த அஸ்வதி, மருத்துவமனை ஊழியர்களிடம் விவரத்தைக் கூறினார். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணையில் அந்தக் குழந்தையை நர்ஸ் வேடத்தில் ஒரு இளம்பெண் கொண்டு சென்ற விவரம் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் இளம்பெண் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று நடத்திய விசாரணையில் குழந்தையை கடத்தியது நீது ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, நீது ராஜின் பிளாக் மெயில் திட்டம் தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் இப்ராஹிம் பாதுஷாவையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கோட்டயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post கள்ளக்காதலனின் திருமணத்தை நிறுத்த குழந்தையை திருடிய இளம்பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Neethuraj ,Tiruvalla ,Pathanamthitta district ,Kerala ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!