×

போலி அறிவிப்புகள் மூலம் மக்களை மதி மயக்கி ஏமாற்ற முயற்சிக்கும் அதிமுக கூட்டணி தேர்தலில் தோல்வி அடைவது உறுதி!: திருமாவளவன்

சென்னை: போலி அறிவிப்புகள் மூலம் மக்களை மதி மயக்கி ஏமாற்ற முயற்சிக்கும் அதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைவது உறுதி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு அரசியல் களத்தில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து கொண்டு போலி அறிவிப்புகள் மூலம் மக்களை மயக்கி அதிமுக கூட்டணி ஏமாற்ற முயற்சிப்பதாக சாடினார். அதிமுக-வோடு கூட்டணி அமைத்து சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில் சாதி, மதவாத சனாதன சக்திகள் காலூன்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய திருமாவளவன், இந்த சட்டமன்ற தேர்தல் மதசார்பின்மை – மதவாத சக்திகளுக்கு இடையிலான யுத்தம் என்றார். இந்த யுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 6 வேட்பாளர்கள், 6 படைகளாக கொள்கை பகைவர்களை விரட்டி அடிப்பார்கள் எனவும் குறிப்பிட்டார். மேலும் அதிமுக-வினர் எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும், எந்தெந்த வகை ஆயுதம், அஸ்திரங்களை பயன்படுத்தினாலும் வீழ்வது உறுதி. திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆள்வது உறுதி என  திருமாவளவன் தெரிவித்தார். …

The post போலி அறிவிப்புகள் மூலம் மக்களை மதி மயக்கி ஏமாற்ற முயற்சிக்கும் அதிமுக கூட்டணி தேர்தலில் தோல்வி அடைவது உறுதி!: திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : The Indirect Alliance ,Thirumavavavan ,Chennai ,Thirumavavan ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!