×

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: 4 சிறுவர்கள் கைது

அண்ணாநகர்: சென்னை ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த 41 வயது பெண், ஜெ.ஜெ. நகர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘’கடந்த 27ம் தேதி வெளியே சென்ற தனது 16 வயது மகளை காணவில்லை’’ என்று தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், சிறுமியை போலீசார் மீட்டு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது சிறுமி, ‘’அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் வெளியூர் சென்றிருந்தேன். அங்குவைத்து அவர்கள் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, சிறுமியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமி அடையாளம் காட்டிய 18 வயதுக்கு உட்பட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தபோது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டப்பிரிவின்கீழ் 4 பேரையும் கைது செய்தனர்….

The post சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: 4 சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,J.J. Nagar ,Chennai, J.J. ,
× RELATED நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு போலீஸ் சம்மன்