×

தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறி குழந்தை பலி

சென்னை: பாண்டிபஜார் தர்மாபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அப்பு (22). பாண்டிபஜாரில் உள்ள மீன் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, கடந்த ஆண்டு கவுசல்யா என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு விமலிக்கா என்ற 2 மாத பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு குழந்தை பசியால் அழுதுள்ளது. கவுசல்யா படுத்துக்கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததாக கூறப்படுகிறது.இதனால், குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, மயங்கியுள்ளது. அதிர்ச்சியடைந்த அப்பு மற்றும் கவுசல்யா குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தையை சோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். …

The post தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறி குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dharmapuram Main Road, Pandipazar ,Bandibazar ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...