×

உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தபோது டாக்டர் வீட்டில் 67 சவரன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

பூந்தமல்லி: காட்டுப்பாக்கம், கோபுரச நல்லூர், ஐஸ்வர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் பிரபாகர்(31), இவர் டாக்டர். நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அடையாறில் உள்ள  தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு மறுநாள் அதிகாலை வீட்டிற்கு வந்தவருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் எல்லாம் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, வீட்டின் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு வீட்டின் மாடியில் இருந்த கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 67 சவரன் நகைகள், ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, பூந்தமல்லி போலீசில்  புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தனர். இதில் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். வீட்டிற்கு தெரியாத நபர் யாராவது வந்தால் வீட்டை பாதுகாக்க விலை உயர்ந்த நாயை வளர்த்து வந்துள்ளார். பிறந்தநாள் விழாவை கொண்டா உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு  முன்பு, தான் வளர்த்த நாய்க்கு பிரியாணி உணவை வைத்து சென்றுள்ளனர். ஆனால், பிரியாணியை சாப்பிட்ட நாய் கொள்ளையர்கள் வந்தபோது கூட சத்தம் ஏதும் போடாமல் அமைதியாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தபோது டாக்டர் வீட்டில் 67 சவரன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Poontamalli ,Manoj Prabhakar ,Kattupakkam ,Gopurasa Nallur, Aishwarya Garden ,Savaran ,
× RELATED காரைக்குடியில் பரபரப்பு: கத்தி...