×

விசாரணைக்காக வீட்டிற்கு சென்றபோது துப்பாக்கியால் சுடுவேன் என எஸ்ஐயை மிரட்டிய முதியவர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

அண்ணாநகர்: கோயம்பேடு சீனிவாச நகர் முதல் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (55). தனியார் கம்பெனியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது தங்கை ராஜலட்சுமி (53).  சொத்து பிரச்னை காரணமாக, ராஜலட்சுமியை இளங்கோவன் வீட்டைவிட்டு துரத்தி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ராஜலட்சுமி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், உதவி ஆய்வாளர் சந்திரசேகர்  தலைமையில் போலீசார் விசாரணைக்காக, இளங்கோவன் வீட்டிற்கு நேற்று சென்றனர். அப்போது இளங்கோவன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், தனக்கு அண்ணா நகர் துணை ஆணையர் மற்றும் மதுரவாயல் உதவி ஆணையரை தெரியும். என் மீது நடவடிக்கை எடுத்தால் உனது வேலை பறிபோயிடும் கிளம்பு. தனது தந்தை ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர். என்னிடம்  துப்பாக்கி உள்ளது. சுட்டு கொலை செய்துவிடுவேன் என்றும், விசாரணைக்கு வரமுடியாது எனவும் கூறி, உதவி ஆய்வாளரை வெளியே துரத்தியுள்ளார். மேலும், இதற்கு முன்பு கோயம்பேட்டில் இருந்த ஆய்வாளரை இடமாற்றம் செய்தவன் நான் என்றும் மிரட்டுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விசாரணைக்கு சென்ற போலீசாரை, முதியவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என மிரட்டும் வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது….

The post விசாரணைக்காக வீட்டிற்கு சென்றபோது துப்பாக்கியால் சுடுவேன் என எஸ்ஐயை மிரட்டிய முதியவர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Ilangovan ,First Street, Koyambedu Srinivasa Nagar ,
× RELATED வீட்டில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி