×

உபி போலீசார் மீது பகீர் குற்றச்சாட்டு மாஸ்க் போடாத வாலிபரின் கால், கையில் ஆணி அடிப்பு?

பரேலி:உத்தரபிரதேச மாநிலம் ஜோகி நவாடாவைச் சேர்ந்த ஷீலா தேவி என்பவர், தனது மகன் ரஞ்சித்துடன் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கொடுத்த புகாரில், ‘கடந்த 24ம் தேதி இரவு 10 மணியளவில், எனது மகன் ரஞ்சித் வீட்டிற்கு வெளியே சென்றிருந்தார். மாஸ்க் அணியாததால் என் மகனை, ஜோகி நவாடா போலீசார் புறக்காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, கைகள் மற்றும் கால்களில் ஆணிகளை அடித்து காயப்படுத்தி உள்ளனர். சம்பந்தப்பட்ட 3 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார். போலீஸ் எஸ்பி ரோஹித் சிங் சஜ்வான், காயமடைந்த ராஞ்சித்தை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கால், கைகளில் யார் அடித்தார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘‘அந்த வாலிபர் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் உள்ளன. அவரை கைது செய்யாமல் இருக்க நாடகம் நடத்தி உள்ளார்’’ என்கின்றனர். தொடர்ந்து, மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஞ்சித், ஏற்கனவே உள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்….

The post உபி போலீசார் மீது பகீர் குற்றச்சாட்டு மாஸ்க் போடாத வாலிபரின் கால், கையில் ஆணி அடிப்பு? appeared first on Dinakaran.

Tags : Bagheer ,UP ,Sheela Devi ,Jogi Nawata, Uttar Pradesh ,Ranjith ,Dinakaran ,
× RELATED குட்டி ஜப்பான் சிவகாசியில் பள்ளி, கல்லூரி நோட்டுகள் தயாரிப்பு பணி ஜரூர்