×

ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க கோரி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம் : குண்டுக்கட்டாக கைது

திருச்சி: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க கோரி, திருச்சி காவிரி ஆற்று மணலில் கழுத்தளவு புதைந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் கடந்த 108 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் 200 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மரபணு மாற்றப்பட்ட விதைகள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை தரவேண்டும், கோதாவரி காவிரி இணைப்பு அறிவித்து நிதி ஒதுக்க வேண்டும், விவசாயிக்கு 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி காவிரி ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழி ேதாண்டி அதில் இறங்கி கழுத்தளவு மணலை மூடி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் ஸ்ரீரங்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் எழுந்திருக்க மறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரையும் போலீசார் குண்டு கட்டாக கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்….

The post ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க கோரி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம் : குண்டுக்கட்டாக கைது appeared first on Dinakaran.

Tags : Kaviri river-sand ,Kaviri ,-sands ,Dinakaran ,
× RELATED எடப்பாடி முதல்வராக இருந்தபோது அவரது...