×

சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்ளும் பாஜ: நாளுக்கு நாள் அதிருப்தி அலை

குமரியில் பாஜாவில் 2ம் கட்ட தலைவர்கள் யாரையும் பொன்.ராதாகிருஷ்ணன் வளர்க்கவில்லை. அமைச்சராக இருந்த போதும், கட்சி தொண்டர்கள் யாருக்கும் நியாயமான பரிந்துரைகள் கூட செய்யவில்லை. அவருக்கு வேண்டிய ஒரு சிலருக்கு மட்டுமே  உதவினார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் கட்சி நிர்வாகிகள் சிலர் தேர்தல் வேலை செய்யாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாக பல்வேறு விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் முன்வைத்து  கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு பொன்னார் ஆதரவாளர்களும், பொன்னார் குமரிக்கு செய்துள்ள வளர்ச்சி பணிகளை பட்டியல் இட்டும், இதுவரை இருந்த எம்.பிக்கள் என்ன செய்தனர் என எதிர் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். முன்னாள் நகர் மன்ற தலைவி மீனாதேவ் மகன், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, சமய வகுப்பு உள்ளிட்ட இந்து அமைப்புகளின் பெயரை குறிப்பிட்டு, பொன்னாருக்கு சீட் வழங்கியதை நேரடியாகவும் மறைமுகமாகவும் கேலி பேசுவதாக  பகிர்ந்துள்ளது மிகவும் சூட்டை கிளப்பியுள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த பதிவை எப்படி பொன்னார் அனுமதித்தார் என்ற அதிர்ச்சியையும் கட்சி மற்றும் சங் பரிவார் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. சில இந்து அமைப்புகள் பொன்னார் மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிராக களம் இறங்க இருப்பதாக, பா.ஜனதா ஆதரவாளர்களின் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி  வருகிறது. …

The post சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்ளும் பாஜ: நாளுக்கு நாள் அதிருப்தி அலை appeared first on Dinakaran.

Tags : Baja ,Kumari ,Rathakrishnan ,of discontent ,
× RELATED எஸ்.ஐ.க்கு ‘பளார்’ விட்ட பாஜ கவுன்சிலர் கைது