×

உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்!

வாமன ஜெயந்தி 29-8-2020தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, மகாபலிச்சக்கரவர்த்தி யிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்தன. மகாபலி சக்கரவர்த்திக்கு முக்திப் பேற்றினை வழங்கிய திருவோணத்தன்று, மக்கள் வாழ்வில் அனைத்து நலனும் பெற வேண்டி மகாவிஷ்ணுவை நோக்கி விரதம் இருந்து வழிபடுகின்றனர்.தமிழகத்தில் நாகை மாவட்டம் கடற்கரையையொட்டி திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யம் நகர் உள்ளது. அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான் தனது திருமண காட்சியை காட்டி அருளிய தலம் இது. இங்குள்ள புகழ்பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோயிலில்,ஒருமுறை பசியுடன் இருந்த எலி ஒன்று கோயில் தீபத்தில் உள்ள நெய்யைத் தனக்கு ஆகாரமாக உட்கொள்ள வந்தது. தன்னை அறியாமல் எலி தன் மூக்கால் அச்சமயம் அணையும் தருவாயிலிருந்த தீபத்தின் திரியை தூண்டிவிட்டதால் தீபம் சுடர் விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தது. சிவன் கோயில் விளக்கு அணையாமல் காத்த பயனின் காரணமாக எலி அடுத்த பிறவியில் சிவபெருமானின் அருளால் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க நேர்ந்தது. இதன் விபரத்தை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் எட்டாம் திருப்பாட்டில் (4-ம் திருமுறை- ‘‘ஆதியில் பிரமனார் தாம்” என்று தொடங்கும் பதிகம்) தெரிவிக்கிறார்.‘‘நிறை மறைக்காடு தன்னில் நீண்டு எரி தீபந் தன்னைக்கறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்டநிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம்குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே”மந்திர சித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த மறைக்காட்டில் நீண்டு எரியும் விளக்கில் ஊற்றியுள்ள நெய் தனைக் கறுத்த நிறத்தை உடைய எலி உண்ண வந்தபோது அதன் மூக்கினை அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய, அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால் சூழப்பட்ட நிலஉலகம், தேவர் உலகம், நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை எல்லாம் ஆளுமாறு மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்து குறைவற வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.அதன்படி அசுர குலத்தில் மாவலி என்ற பெயரில் அவதரித்து, அரசனாகி கேரளாவை ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சி காலத்தில் குடிமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். தனது ஆற்றலாலும், தவ வலிமையாலும் மன்னன் மாவலி, தேவர்களை தோற்கடித்தார். மூவுலகங்களையும் ஆளும் ஆதிக்கம் பெற்று மகாபலி சக்கரவர்த்தியானார். மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாய் வாழ்ந்து வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்) வழிநடத்தி வந்தார்.நல்லாட்சி நடத்தி வரும் மகாபலி மீதுதேவர்கள் குறை கூறுகிறார்களே என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இந்த வையம் நிலைத்திருக்கும் வரையில் மகாபலி புகழ் நிலைக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவு செய்தார். குள்ளமான உருவில் வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். விஷ்ணுதான், வாமன அவதாரம் எடுத்து வருகிறார் என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்து கொண்ட சுக்கிராச்சாரியார். ‘வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்து விடாதே. அது உன் ஆட்சிக்கும், ஆயுளுக்கும் ஆபத்தாய் முடியும்’ என்று மகாபலியை எச்சரித்தார்.கேட்கவில்லை மகாபலி ‘நான் சிறப்பாக ஆட்சி நடத்துவதை, மக்களுக்கு வாரி வழங்குவதை அகில உலகமும் பாராட்டுகிறது. இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த பாக்கியம். எல்லோரும் கடவுளிடம் தான் கேட்பார்கள். அந்த கடவுளே இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்கு கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப் போகிறது’ என்றார். விஷ்ணுவை தரிசிக்க காத்திருந்தார். வாமன அவதாரம் எடுத்து மகாபலி முன்தோன்றி ‘‘எல்லோருக்கும் தானம் வழங்குகிறாய் எனக்கு வழங்க முடியுமா’’ எனக்கேட்க, என்ன வேண்டும் கேளுங்கள் என்றான் மன்னன், மூன்றடி மண் வேண்டும் என்றார் வாமனன்.நீரை வார்த்து தானம் அதற்கு சம்மதம் தெரிவித்த மகாபலி மன்னன் நீரை வார்த்து தானம் கொடுத்தார். அசுர குரு சுக்கிராச்சாரியார் ஒரு வண்டாக மாறி கமண்டல துவாரத்தை அடைத்தார். இதை பார்த்த பகவான் குறுநகை புரிந்தவாறே தர்ப்பையால் கமண்டலத்தின் வாயை குத்தினார். அதனால் சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை இழக்க நேரிட்டது. பின்னர் வாமனர் திரி விக்ரமனாக வளர்ந்தார்.ஓங்கி உலகலந்த உத்தமன் ஓரடியால் சத்யலோகத்தை அளந்தார். ஈரடியால் மண்ணையும், விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடியில் மகாபலி மன்னரின் தலையில் தனது பொற்பாதத்தை வைத்து அவரை பாதாள லோகத்தில் அழுத்தி பேரருள் புரிந்தார். அப்போது மகாபலி மன்னர், மகாவிஷ்ணுவிடம் ‘பகவானே, நான் மிகப்பெரிய பேறு பெற்றேன். அடியேன் பேறு பெற்ற இத்திருநாளை எல்லா மக்களும் இன்ப நாளாக கொண்டாட அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினார். அதற்கு பகவானும் அருள் செய்தார். மகாபலி பகவானுக்கு தானம் கொடுத்தது ஆவணி மாதம் திருவோண தினத்தன்று நடந்தது.அன்றைய தினம் மகாபலி மன்னன் தன்மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? என்பதை பார்ப்பதற்காக பாதாள லோகத்தில் இருந்து தான் ஆட்சி செய்த கேரளா மாநிலத்திற்கு வருவதாக ஐதீகம். மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகை (31.8.2020)கொண்டாடப்படுகிறது….

The post உலகளந்தானை உள்ளத்தில் நினைப்போம்! appeared first on Dinakaran.

Tags : Vamana Jayanthi ,Mahawalichakakarthi ,Thiruvona ,
× RELATED இந்த வார விசேஷங்கள்