×

தி.நகரில் நடைபயிற்சி செய்த பெண்ணிடம் 10 சவரன் பறிப்பு: தடுத்த கணவருக்கு கத்திக்குத்து

சென்னை: தி.நகர் திருமலைபிள்ளை சாலையை சேர்ந்தவர் சோமசுந்தரம் (58), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவி பாரதியுடன் (55)நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு திருமலைபிள்ளை சாலையில் தம்பதி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 3 பேர், முகவரி கேட்பது போல் நடித்து, திடீரென பாரதி கழுத்தில் கிடந்த 10 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். இதை சற்றும் எதிர்பாராத பாரதி மற்றும் அரவது கணவர் சோமச்சுந்தரம் அந்த 3 கொள்ளையர்களை பிடித்துக்கொண்டு திருடன்… திருடன்… என கூச்சல் போட்டப்படி பிடிக்க முயன்றனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த வழிப்பறி கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சோமசுந்தரத்தை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்தார். தகவலறிந்து தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சோமச்சுந்தரத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post தி.நகரில் நடைபயிற்சி செய்த பெண்ணிடம் 10 சவரன் பறிப்பு: தடுத்த கணவருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : D. Nagar ,CHENNAI ,Somasundaram ,Tirumalaipillai Road, T.Nagar. ,Bharti ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து ரூ1 லட்சம், 15 கிலோ வெண்கலம் திருட்டு