×

லிங்க புராணம் கூறும் சிவ வழிபாடு

சிவபெருமானுக்கு  தீர்த்தவாரி செய்ய வேண்டும். (நீராட்டல்). மணம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சிமுதல் திருத்தாள் வரைத்தூவ வேண்டும். தூவும் பொழுது நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும். ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும். சிவாலயங்களைச் சாணமிட்டு அலகிட்டு (துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல்) வாழ்த்த வேண்டும். நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.  சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும். எருக்க மலர் மாலைகளைப் பெருமான் தலையில் வட்டமாக அணிவிக்க வேண்டும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரத்தை  செய்ய வேண்டும், பெண்கள் ஐந்தங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும் என்று லிங்க புராணம் கூறுகிறது.ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு வழிபாடு : சிவராத்திரி அன்று மாலையில் பிரதோஷம், மாலைப் பிரதோஷம் முதல் வழிபாடு தொடங்க வேண்டும். சிவராத்திரிக்கு முந்தைய மாலை, காலத்தை நடராஜ மூர்த்தியையும் பிரதோஷ நாயகரையும் வழிபட வேண்டும். பிரதோஷ நேரத்தில் இறைவனைத் தரிசித்தது முதல் கோயிலிலேயே இருந்து கொண்டு சிவ சிந்தையுடனே ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையாக பூஜை செய்ய வேண்டும். பிறர் செய்வதைக் காண வேண்டும்.சிவாலயங்களில் நடைபெறும் நான்கு ஜாம அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்1. இரவின் முதல் காலம்:- ஜாமம்) சோமஸ்கந்தரை வழிபட வேண்டும். அப்போது பஞ்சகவ்ய அபிஷேகம் சிறந்தது. ரிக்வேதம் ஓத வேண்டும்.முதல் சாமம்வழிபட வேண்டிய மூர்த்தம் – சோமாஸ்கந்தர்அபிஷேகம் – பஞ்சகவ்யம்அலங்காரம் – வில்வம்அர்ச்சனை – தாமரை, அலரிநிவேதனம் – பால் அன்னம்,சர்க்கரைப் பொங்கல்பழம் – வில்வம்பட்டு – செம்பட்டுதோத்திரம் – ரிக்வேதம் , சிவபுராணம்மணம் – பச்சைக் கற்பூரம்,  சந்தனம்புகை – சாம்பிராணி, சந்தனக்கட்டைஒளி- புஷ்பதீபம்2. இரண்டாம் காலம்:- தென் முகக் கடவுளாகிய தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். சிவலிங்கத்திற்கு தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் கலந்த பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. யஜுர் வேதம் ஓத வேண்டும்.இரண்டாம் சாமம்வழிபட வேண்டிய மூர்த்தம் – தென்முகக்கடவுள்அபிஷேகம் – பஞ்சாமிர்தம்அலங்காரம் – குருந்தைஅர்ச்சனை – துளசிநிவேதனம் – பாயசம், சர்க்கரைப் பொங்கல்பழம் – பலாபட்டு – மஞ்சள் பட்டுதோத்திரம் – யஜுர் வேதம் , கீர்த்தித்திருவகவல்மணம் – அகில், சந்தனம்புகை – சாம்பிராணி, குங்குமம்ஒளி- நட்சத்திரதீபம்3. மூன்றாம் காலம் :- லிங்கோற்பவரை வழிபடுவது சிறப்பு. திருவண்ணாமலையில் இந்த மூன்றாம் காலத்தில் தான் (ஜாமத்தில்) லிங்கோற்பவ உற்பத்தி ஆயிற்று என்று புராணம் சொல்லுகிறது.மூன்றாம் சாமம்வழிபட வேண்டிய மூர்த்தம் – லிங்கோற்பவர்அபிஷேகம் – தேன், பாலோதகம்அலங்காரம் – கிளுவை, விளாஅர்ச்சனை – மூன்று இதழ் வில்வம்,ஜாதி மலர்நிவேதனம் – எள்அன்னம்பழம் – மாதுளம்பட்டு – வெண் பட்டுதோத்திரம் – சாம வேதம், திருவண்டப்பகுதிமணம் – கஸ்தூரி சேர்ந்த சந்தனம்புகை – மேகம், கருங் குங்கிலியம்ஒளி- ஐந்துமுக தீபம்4. நான்காம் காலம் :- சிவராத்திரி நான்காம் காலத்தில் கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்வது சிறப்பு. கஸ்தூரி மேல் பூச்சாக பூசலாம். பச்சை ஆடை அணிவிக்கலாம். திருநாவுக்கரசர் பாடலைப் பாடலாம். அதர்வண வேதம் ஓதுதல் சிறந்தது. இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் பிறர் செய்வதைக் கண்டு கேட்டுத் தரிசிக்கலாம்.நான்காம் சாமம்வழிபட வேண்டிய மூர்த்தம் – சந்திரசேகரர்(இடபாரூடர்)அபிஷேகம் – கருப்பஞ்சாறு, வாசனை நீர்அலங்காரம் – கரு நொச்சிஅர்ச்சனை – நந்தியாவட்டைநிவேதனம் – வெறும் சாதம்பழம் – நானாவித பழங்கள்பட்டு – நீலப் பட்டுதோத்திரம் – அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்மணம் – புனுகு சேர்ந்த சந்தனம்புகை – கர்ப்பூரம், லவங்கம்ஒளி- மூன்று முக தீபம்.தொகுப்பு: ஆ.கலைச்செல்வன்

The post லிங்க புராணம் கூறும் சிவ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Shiva ,Lord ,Lord Shiva ,
× RELATED சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாரியூர் கடலில் வலைவீசும் படலம் கோலாகலம்