×

ஷீரடி சாயிபாபா மக்களுக்கு அளித்த 11 உறுதி மொழிகள்..!

ஷீரடி சாயிபாபா மக்களுக்கு அளித்த 11 உறுதி மொழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.1. ஷீர்டியில் காலடிபடும் பக்தனுக்கு வரும் ஆபத்து விலகி விடும்.2. என் சமாதியின் படி ஏறுபவனின் அனைத்து துக்கங்களும் போக்குவேன்.3. இவ்வுலகை விட்டு என் பூதவுடல் மறைந்தாலும் பக்தன் அழைத்தால் ஓடோடி வருவேன்.4. திட பக்தி, நம்பிக்கை, விசுவாசத்துடன் யாசிப்பவன் ஆசையை என் சமாதி பூர்த்தி செய்யும்.5. இன்னும் நான் உயிருடன் இருக்கிறேன் என்று எப்பொழுதும் உணரவும். இதனை சத்தியமென்றறிருந்து அனுபவம் பெறுவீர்.6. என்னை சரணடைந்தும் வெறும் கையோடு திரும்பினான் என்று எந்த பக்தனாவது இருந்தால் அவனை எனக்குக் காண்பியுங்கள்.7. பக்தர் என்னை எப்படிப்பட்ட பக்தியுடன் உணருகிறானோ, அப்படிப்பட்ட அனுபவங்கள் அவனுக்குத் தருவேன்.8. எப்பொழுதும் உங்கள் சுமைகளை நான் சுமக்கிறேன். என் வாக்குப் பொய்யாவதில்லை.9. நீங்கள் கேட்பது எல்லாம் நான் கொடுப்பேன். என் உதவியையும், அருளையும் அள்ளித்தர நான் காத்திருக்கிறேன்.10. பக்தியுடன் என் மொழிகளை மனதில் ஏற்பவனுக்கு நான் கடன்பட்டவன் ஆவேன்.11. என் திருவடிகளை அடைந்த பக்தன் பெரும் பாக்கியவான் ஆவான்…

The post ஷீரடி சாயிபாபா மக்களுக்கு அளித்த 11 உறுதி மொழிகள்..! appeared first on Dinakaran.

Tags : Shirdi Saibaba ,Shirdi Sai Baba ,Shirdi ,
× RELATED கடவுள் ராமர் அசைவம் சாப்பிடுபவர்...