×

மட்டன் புலாவ்

எப்படிச் செய்வது?அரிசியையும், மட்டனையும் கழுவி சுத்தம் செய்து
தண்ணீரை வடித்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை காயவைத்து பட்டை, லவங்கம்,
ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி
பச்சைமிளகாய், மட்டனை சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி, இஞ்சி பூண்டு
விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கி, பாதியளவு புதினா இலையை சேர்த்து
வதக்கி, 1½ கப் தண்ணீர் ஊற்றி மிளகாய்த்தூள் கலந்து மட்டனை 10 நிமிடம்
வேகவிடவும். பிறகு தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து கலந்து கொதி வரும்பொழுது
அரிசியை போட்டு குக்கரை மூடி விசில் போடவும். விசில் சத்தம் வந்ததும் சிறு
தீயில் வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கி மீதியுள்ள புதினா, கொத்தமல்லியை
போட்டு கிளறி பரிமாறவும்.

The post மட்டன் புலாவ் appeared first on Dinakaran.

Tags : Mutton Pulau ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...